தென் மாகாண சபை
இலங்கையின் வரலாற்று மிக்க அதிகாரப் போட்டியில் மத்திய நிலையமாகவும் அதிகாரப் பரவலாக்கத்தின் ஒரு படிமுறையாக 1987 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதனைக் காணலாம்.அதன் பிரகாரம், 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி அரசினால் வெளியிடப்பட்ட அதி விஷேட வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தல் மூலம் அனைத்து மாகாணங்களுக்காகவும் அரசியலமைப்பின் ஒழுங்கு விதிகளின் கீழ் மாகாண சபைகள் அமைக்கப்பட்டதோடு,இலங்கைக்குள் 09 மாகாணங்களுக்கு உரிய மாகாண சபைகள் அமைக்கப்பட்டதோடு,முதற் கட்டமாக 08 மாகாணங்களே செயற்படுத்தப்பட்டது.வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்து வடகிழக்கு மாகாண சபையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
தென் மாகாணத்தின் முதலாவது மாகாண சபை 1988.06.09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, அதன் முதலாவது கௌரவ ஆளுநர் பதவிக்காக எம்.ஏ. பாக்கிர் மாக்கர் அவர்களே நியமிக்கப்பட்டார்.
இரண்டாவது மாகாண சபை 1993.05.17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு ,ஒரு குறிப்பிட்ட சில காலமே செயற்பட்டது. அதன் கௌரவ ஆளுநர் பதவி வகித்தது எம்.ஏ. பாக்கிர் மாக்கர் அவர்களாவதோடு,கௌரவ பிரதம அமைச்சர் பதவியை அமரசிரி தொடங்கொட அவர்களே பதவி வகித்தார்.மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் தென் மாகாண சபையின் கௌரவத் தலைவராக பதவி வகித்தார்.
மேலதிகமாக


